தொடர் வன்முறைக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பும் கேரளா - வன்முறை தொடர்பாக 1,869 வழக்குகள் பதிவு
Jan 7 2019 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த நான்கு நாட்கள் நடைபெற்ற பரவலான வன்முறைக்கு பின்னர், கேரளாவில் நேற்று இயல்பு நிலை திரும்பியது.
கேரளா மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கம்யூனிஸ்டு, பா.ஜ.க கட்சி தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, வெடிகுண்டுகள் வீச்சு சம்பவமும் அரங்கேறியது.
கேரளாவில் வன்முறை தொடர்பாக இதுவரை ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 769 போராட்டக்காரர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 980 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக மாநில காவல்துறை தலைவர் திரு.லோக்நாத் பெஹரா, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வரை பந்த், போராட்டங்கள், வன்முறை என இருந்த கேரள மாநிலத்தில் நேற்று இயல்பு நிலை திரும்பியது.