மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் பொருளாதார கொள்கைளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையும், நாளை மறுநாளும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - வங்கி ஊழியர்கள், அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் பங்கேற்பதாக அறிவிப்பு
Jan 7 2019 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் ஊழியர்கள் விரோதக் கொள்கைக்குக் கண்டனம் தெரிவித்து, நாளை, நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இதனால், வங்கிப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊழியர்கள் விரோதக் கொள்கைக்குக் கண்டனம் தெரிவித்து, ஐடிபிஐ வங்கி அனைத்து இந்திய ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்ததில் ஈடுபட இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. பாங்க் ஆப் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கமும் இதே இரு நாட்களில் தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வங்கிகள் இணைப்பு, ஊதிய உயர்வு போன்ற காரணங்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 21 மற்றும் 26ஆம் தேதிகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.