பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக இளைஞர் கைது : தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Jan 4 2019 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வடஇந்தியாவில் 'ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம்' என்ற புதிய பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது. சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் கவரப்பட்ட அதன் ஆதரவாளர்கள் இந்த அமைப்பை தொடங்கி உள்ளனர். இதனையடுத்து டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் அதிரடி சோதனையை நடத்திய தேசிய புலனாய்வு பிரிவு 10 பேரை கைது செய்தது. டெல்லியில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதற்கு இந்த இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டி இருப்பதும் தெரியவந்தது. இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக நாயிம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்த இளைஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த இளைஞரை 10 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00