லோக்பால் அமைப்பை உருவாக்க காலதாமதம் ஆவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் - லோக்பால் உறுப்பினர்களை நியமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு
Jan 4 2019 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லோக்பால் அமைக்கான தேர்வுக்குழுவை அமைப்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வழி செய்யும் லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய குழு அமைப்பதில் காலதாமதம் ஆவதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநிலங்கள் வாரியாக லோக்பால் அமைப்பு தேர்வுக்குழுவை உருவாக்க காலதாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.