அயோத்தி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் - விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Jan 4 2019 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாணையை வரும் 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றதையடுத்து, இன்று விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய், நீதிபதி திரு. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு, சுமார் ஒரு நிமிடம் வரை மட்டுமே இதனை விசாரித்தது. உரிய அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அந்த அமர்வு முன்பு வரும் 10ம் தேதி அயோத்தி வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.
இதனிடையே, அவசரம் கருதி இந்த வழக்கை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.