5 மாநில தேர்தல் முடிவு - மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் நரேந்தி மோடி டுவிட்டரில் கருத்து
Dec 12 2018 12:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக அரசு படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட திரு.நரேந்திர மோடி, 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என்றும், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.