தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கிறார் சந்திரசேகரராவ் - ஹைதராபாத்தில் நாளை பதவியேற்பு விழா
Dec 12 2018 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் மீண்டும் TRS கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பதால், அதன் தலைவர் திரு. சந்திரசேகரராவ், அம்மாநில முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தெலங்கானா மாநிலத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் வகித்து வந்தது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதலமைச்சர் திரு. சந்திரசேகர ராவின் மகன் திரு. K.T. ராமாராவ், நெருங்கிய உறவினரான திரு. ஹரீஷ் ராவ் உட்பட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர், இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அறுதிப் பெரும்பான்மையுடன் TRS கட்சி வெற்றி பெற்றிருப்பதையடுத்து, திரு. சந்திரசேகரராவ் மீண்டும் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். ஹைதராபாத்தில் நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அவர் பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், தேசிய அரசியலிலும் இனி தீவிரம் காட்டப் போவதாக திரு. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.