ரஃபேல் ஒப்பந்தத்துக்கு ஃபிரான்ஸ் அரசு உத்தரவாதம் தரவில்லை : விமானத்தின் விலை உயர்வுக்கு பிரதமர் மோடியே காரணம் - ராகுல் குற்றச்சாட்டு
Nov 16 2018 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு ஃபிரான்ஸ் அரசு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை என விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, விமானத்தின் விலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி, நேரடியாக தலையிட்டு உயர்த்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு, அந்நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உத்தரவாதத்துக்கு பதிலாக, ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரு. ராகுல் காந்தி, ஃபிரான்ஸ் அரசு அளித்துள்ள ஒப்புதல் கடிதம், ரஃபேல் ஒப்பந்த உத்தரவாதத்திற்கு போதுமானதல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு, விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.