சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தது கேரள அரசு
Nov 12 2018 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு கேரள அரசு சம்மதித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க, பாரதிய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்படாடு செய்ய வலியுறுத்தி, கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனுக்கு, பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இதனை மறுத்து வந்த அம்மாநில அரசு, தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு சம்மதித்துள்ளது. கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அப்போது, ஐயப்பனை தரிசனம் செய்ய 539 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.