உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் - உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு அறிக்கை தாக்கல்
Nov 13 2018 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ரஃபேல் விமானத்தின் விலை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை, சீலிட்ட உறையில் 10 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கடந்த 31ம் தேதி உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 9 பக்கங்கள் கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, பாதுகாப்பு துறை கொள்முதல் குழு, அனுமதி அளித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.