திட்டமிட்டபடி ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் : இஸ்ரோ அறிவிப்பு
Nov 13 2018 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திட்டமிட்டபடி, ஜிசாட்-29 செயற்கைகோள், வரும் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. கஜ புயலால், ராக்கட் ஏவப்படாது என செய்திகள் வெளியான நிலையில், இஸ்ரோ இதனை தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜ புயல் வரும் 14 அல்லது 15ம் தேதி சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகள் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முதலில் கூறியது. ஆனால் தற்போது சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 14ம் தேதி மாலை 5.08 மணிக்கு, ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கட் மூலம், விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட்-29 செயற்கைகோள் ஏவப்படுமா என கேள்விகள் எழுந்தன.
3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட, தகவல் தொழில்நுட்ப செயற்கைகோளான ஜிசாட்-29, திட்டமிட்டபடி, வரும் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.