அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - இந்து மகா சபையின் கோரிக்கை நிராகரிப்பு
Nov 12 2018 4:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாபர் மசூதி தொடர்பான சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற இந்து மகா சபையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என அண்மையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கு வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
ஆனால், அதற்கு முன்னதாகவே விசாரிக்கக்கோரி இந்து மகா சபை அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இக்கோரிக்கையை ஏற்க ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.