திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு - பொதுநல அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Nov 12 2018 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநங்கைளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக அறிவிக்கக்கோரி ஒரு பொதுநல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 377 நீக்கம் செய்யப்பட்டதால், பாலியல் வன்கொடுமைகளுக்கு தண்டனை வழங்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 375-ஐ பொதுவானதாக மாற்றவேண்டுமென இந்த வழக்கு தொடர்பான மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருநங்கைகளுக்கான கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.