பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்புப்பணம் வைத்திருப்போர் ஒருவரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை - சத்தீஷ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு
Nov 9 2018 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும் கூட, கருப்பு பணம் பதுக்கி வைத்திருந்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு, வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ளது. இந்த 18 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் ஆதிகம் நிறைந்தது என்பதால், இங்குள்ள மலை கிராமங்களில், பழங்குடியின மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரங்கள் செய்ய வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் திரு. மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி, இன்றும், நாளையும் 5 இடங்களில் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்கர் மாவட்டத்தில், நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு. ராகுல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், சாதாரண மக்களே பாதிக்கப்பட்டதாகவும், மல்லையா, நிரவ் மோடி, முகுல் சோக்ஷி போன்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.