இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் தருமாறு மத்திய பாரதிய ஜனதா அரசு கேட்டிருப்பது, வரலாறு காணாத பொருளாதார சீரழிவு - காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் விமர்சனம்
Nov 9 2018 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோடி செயல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இதன் உச்சக்கட்டமாக இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் தருமாறு மத்திய பாரதிய ஜனதா அரசு கேட்டிருப்பது, வரலாறு காணாத பொருளாதார சீரழிவு என எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பாரதிய ஜனதா அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்திய நாட்டையே பொருளாதார சீரழிவுக்கு கொண்டு சென்றதாகவும், இந்த நாள் ஒரு கறுப்பு நாள் என்றும் மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான செல்வி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.