பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதன் 2-ஆம் ஆண்டு தினத்தையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் - டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
Nov 8 2018 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த இரண்டாம் ஆண்டை நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த 2016 ம் ஆண்டு, நவம்பர் 8 ம் தேதி, இரவு, ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை, பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார். இதன் 2-வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாட்டின் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்படுகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் போராட்டங்களில் கலந்துக் கொள்கின்றனர்.