சத்தீஸ்கரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்ட்டுகள் போலீசில் சரண்
Nov 7 2018 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 மாவோயிஸ்ட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பெரும் அத்துறுத்தலாக விளங்கி வரும் மாவோயிஸ்ட்டுகள், வன்முறை, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை ஒப்படைந்து சரணடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என காவல்துறை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட்டுகள் 62 பேர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் மாவோயிஸ்ட்டுகள் ஒரே நேரத்தில் சரணடைவது இதுவே முதல்முறையாகும்.