காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. 30 கோடி ரூபாய் வரை லஞ்ச பேரம் - கர்நாடக முதலமைச்சர்குமாரசாமி பகிரங்கமாக குற்றச்சாட்டு
Nov 6 2018 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. 30 கோடி ரூபாய் வரை லஞ்ச பேரம் பேசியதாக, கர்நாடக முதலமைச்சர் திரு.குமாரசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, இந்த வெற்றி முதல்படிதான் என்றும், வரும் தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை இழுக்க, பா.ஜ.க. 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும், அதற்கு யாரும் இணங்கவில்லை என்றும் திரு.குமாரசாமி தெரிவித்தார்.