இடைத்தேர்தலில் 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி - நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு
Nov 6 2018 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநில இடைத்தேர்தலில் 2 சட்டமன்ற தொகுதிகளிலும். 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள Shimoga, மாண்டியா, Bellari ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக் கூட்டணியை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சி தனித்து களம் இறங்கியது. கடந்த 3-ம் தேதி பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ராம் நகரம் சட்டமன்றத் தொகுதியில், மதசார்பற்ற ஜனதா தளமும், ஜமகண்டியில் காங்கிரசும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பா.ஜ.கவின் கோட்டையாக இருந்த பெல்லாரியையும் காங்கிரஸ் கைப்பற்றியது. மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஷிமோக மக்களவை தொகுதியில் மட்டும் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தேர்தல் வெற்றியை காங்கிரஸ் -மதசார்பற்ற கூட்டணி தொண்டர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தல் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.