சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்‍கு 50 கோடி ரூபாய் அபராதம் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Oct 16 2018 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்‍கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாகவும், வரும் நாட்களில் இது மேலும் மோசமான நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி காற்றின் ஒட்டுமொத்த தரக்குறியீடு 224 புள்ளிகள் அளவில் மிக மோசமான நிலையில் இருந்ததாக மத்திய அரசின் காற்றின் தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில், காற்றின் தரமானது மோசமான நிலையில் இருப்பதால் காற்று மாசை எதிர்கொள்ள நேற்று முதல் அவசரநிலை செயல் திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, டெல்லியில் அதிகரித்து வரும் மாசு அதிகரிப்பை தடுப்பது குறித்த வழக்கில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, டெல்லி மாநில அரசுக்கு 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00