டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் முன்பு, கைத்துப்பாக்கியுடன் அச்சுறுத்திய பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் கைது - ஆயுத தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு

Oct 16 2018 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் முன்பு, கைத்துப்பாக்கியுடன் நின்று அச்சுறுத்திய பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் 5 நட்சத்திர விடுதிக்கு வெளியே பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கடந்த 14ஆம் தேதி, டெல்லியில் 5 நட்சத்திர விடுதி ஒன்றில், விருந்தினை முடித்துவிட்டு வெளியே வந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டேவின் மகனான ஆஷிஷ் பாண்டே, ஒரு பெண்ணுடன் வாய் தகராறில் ஈடுபட்டபோது, துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுக்கும் காட்சி, செல்பேசியில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பெண்கள் கழிப்பறையை நோக்கி ஆஷிஷ் பாண்டே சென்றதால் இந்த தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது பெண் நண்பரும், பாதுகாவலரும் அமைதிப்படுத்த முயற்சிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆயுதச் தடைச் சட்டத்தின் கீழ் ஆஷிஷ் பாண்டே மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00