புதுச்சேரியில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி : சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை

Oct 16 2018 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் நிதி நிறுவன ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா பைனான்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இதன் கலெக்‍ஷன் ஏஜெண்டாக பணிபுரியும் பாலசுப்பிரமணியம், புதுச்சேரியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு கடனாகக் கொடுத்த தொகைக்கு மாதந்தோறும் வட்டி வசூல் செய்து வருகிறார். அப்படி நேற்று வசூலித்த தொகையை எடுத்து வரும் போது, ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அடித்து உதைத்து பணப்பையை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சோதனையிட்டனர். இதில் ஒரு கேமராவில் பாலசுப்பிரமணியத்தை ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00