இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஐந்து சொத்துக்களை முடக்க தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவு
Oct 13 2018 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுதலாக அமைந்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் மீது தேசிய புலனாய்வு முகமை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்தின் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அவருக்குச் சொந்தமாக மும்பை மசாகாவ் பகுதியில் உள்ள ஐந்து சொத்துக்களை முடக்கும்படி தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.