கடல்வழியே இந்தியாவிற்குள் மீண்டும் புகுந்து தாக்‍குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்‍கை

Oct 13 2018 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் கடல்வழியே புகுந்து இந்தியாவில் மிகப்பெரும் தாக்‍குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இந்தியக்‍ கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல்வழியே ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள், அந்நகரின் பல்வேறு இடங்களில் நடத்திய பயங்கர தாக்‍குதலில் 164 பேர் கொல்லப்பட்டனர்.

இதேபோன்ற ஒரு தாக்‍குதலை இந்தியாவில் மீண்டும் நடத்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இயக்‍கங்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்‍கு தகவல் கிடைத்தது. இந்த இயக்‍கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடல்வழியே இந்தியாவுக்‍குள் புகுந்து துறைமுகங்கள், சரக்‍குக்‍ கப்பல்கள், எண்ணெய் டாங்கர்கள் மீது தாக்‍குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறையினருக்‍கு தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடற்படை, கடலோரக்‍ காவல்படை ஆகியவை உஷார்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைக்‍காலமாக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்‍கங்கள், தீவிரவாதிகளுக்‍கு இந்தியாவை குறிவைத்து கடல்வழி தாக்‍குதல் நடத்த கடுமையான பயிற்சி அளித்து வருவதாகவும் மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00