ரயில்களில் பெண்களை கேலி செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப்படை மத்திய அரசுக்கு கோரிக்கை
Sep 24 2018 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில்களில் பெண்களை கேலி செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க, ரயில்வே பாதுகாப்புப்படை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் நபர்களுக்கு தற்போது ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இருந்த போதிலும், ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென ரயில்வே பாதுகாப்புப்படை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்யும் ஆண்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.