கேரளாவின் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என அறிவிப்பு - இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தல்
Sep 24 2018 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரும் கேரளாவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரளாவில் நாளையும், நாளை மறுதினமும் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, நாளை, பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சில மாவட்டங்களுக்கு "மஞ்சள் எச்சரிக்கை" விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.