ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் எம்எல்ஏ சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் - ஆதரவாளர்கள் காவல் நிலையங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம்
Sep 24 2018 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் காவல் நிலையங்களுக்குத் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் சட்டமன்ற உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தொகுதி மக்களை சந்திக்கச் சென்றனர். அவர்கள் வந்த காரை சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.
அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், தும்ரிகுடா காவல்நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தினர். தீ வைப்பதைத் தடுக்கச் சென்ற காவலர்களையும் ஆதரவாளர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இந்தக் கலவரத்தால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கூடுதலாக போலீஸ் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.