ஒடிசாவில் ராஜநாகம் கடித்ததில் 4 நாய் குட்டிகள் உயிரிழப்பு : நாய்குட்டிகளை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நபர்கள்

Sep 20 2018 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒடிசாவில், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜநாகம் ஒன்று, அங்கு தாயுடன் இருந்த நாய்க்குட்டிகளை கொத்திக்‍கொன்றது. பாம்பிடமிருந்து நாய்க்‍குட்டிகளை காப்பாற்றாமல், அருகிலிருந்தவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்த சம்பவம்,​ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்‍குள் நுழைந்த ராஜ நாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பாம்பை பிடித்து காட்டுக்‍குள் கொண்டுசென்று விட்டனர். ஆனால், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், ராஜ நாகம், அங்கிருந்த 5 நாய்க்‍குட்டிகளை கொத்தியது. இதில் 4 நாய்க்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தன. உயிர்பிழைத்த ஒரு நாய்க்‍ குட்டிக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. முன்னதாக, ராஜநாகம் நாய்க்குட்டிகளை கொத்துவதை தடுத்து நிறுத்தாமல், ஒருசிலர் அதை வீடியோவாக பதிவு செய்தனர். பாம்பிடமிருந்து நாய்க்‍குட்டிகளை காப்பாற்றாமல் வேடிக்‍கை பார்த்ததோடு, படம்பிடித்த நபர்களுக்‍கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00