சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம் உயர்கிறது - சேமிப்பு முதலீடுகள் குறைந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு முடிவு
Sep 20 2018 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தபால் சேமிப்பு திட்டத்தில், மூத்த குடிமக்கள், பிபிஎப் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு முற்றிலும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 8 புள்ளி 7 சதவீதமாகவும், பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7புள்ளி ஆறு சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7 புள்ளி 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு, கிஷான் விகாஸ் பத்திரம் நிறைவடையும் காலம் 112 மாதங்களுக்கு பதிலாக 111 மாதங்களாக குறைக்கப்படுகிறது. பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் 8 புள்ளி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.