கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு - பேராயர் ஃபிரான்கோவிடம் போலீசார் விசாரணை
Sep 19 2018 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் புகாரில் சிக்கிய பேராயர் ஃபிரான்கோவிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட போலீஸ் குழு, அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த கத்தோலிக்க பேராயர் ஃபிரான்கோ மூலக்கல் மீது கேரள கன்னியாஸ்திரி அளித்த பாலியல் குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு பேராயருக்கு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. பேராயர் ஃபிரான்கோவிடம், கேரளாவைச் சேர்ந்த வைக்கம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் K.சுபாஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.