ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் வழக்கு - பிரத்யேக குழுவை அணுக ஆலை நிர்வாகத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி
Sep 18 2018 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் வழக்கில், அதற்கான பிரத்யேக குழுவை அணுக ஆலை நிர்வாகத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பாக உள்ளது என்ற புகாரின்பேரில், ஸ்டெர்லைட் ஆலை அண்மையில் மூடப்பட்டது. இந்த ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தங்களை அனுமதிக்க வேண்டுமெனக்கோரி ஆலை நிர்வாகம், தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தை அணுகியது. இதுதொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட குழுவிடம் ஆலை நிர்வாகம் முறையிடலாம் என்றும், அதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது.