அரசு இயந்திரம் சீர்குலைந்துள்ளதால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மனு - முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது நாளுக்குநாள் ஊழல் புகார் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு
Sep 17 2018 6:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு இயந்திரம் சீர்குலைந்துள்ளதால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, குடியரசு தலைவர் மாளிகையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், தமிழக அரசு இயந்திரம் சீர்குலைந்துள்ளதாலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டு என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகியுள்ளதால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் தமிழக ஆளுநரிடம் இதுதொடர்பான அறிக்கையை பெற வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.