இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவல் வரும் 17ம் தேதி வரை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம் உத்தரவு
Sep 12 2018 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோரேகான் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை வரும் 17ம் தேதி வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பீமா கிராமத்தில் நடந்த மோதல் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான சோதனையில் பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் நடைபெறுவதாக கடிதம் சிக்கியது. அதில், பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இடதுசாரி ஆர்வலர்களான மனிதஉரிமை போராளி கவுதம் நவலகா, இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், சமூக சிந்தனையாளரான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஏற்கெனவே வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றுடன் காவல் முடிவடைய இருந்தது. இன்று நடைபெற்ற இதுதொடர்பான வழக்கில் 5 பேரின் வீட்டுக்காவலை வரும் 17ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.