கேரள வெள்ளத்தில் சிக்கிய 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர் வியாபாரி - கண்பார்வை இழந்து தவிக்கும் பரிதாபம்

Sep 12 2018 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள வெள்ளத்தில், 35 பேரின் உயிரைக் காப்பாற்றிய சதாசிவன் என்பவர் தற்போது பார்வை இழந்து தவித்து வருகிறார்.

கேரளாவின் செங்கானுரைச் சேர்ந்த 58 வயதான சதாசிவன், வெள்ளத்தின்போது, கீழ் செரிமேல் பகுதியில் சிக்‍கித் தவித்த 35 பேரை தனது நண்பர்கள் உதவியுடன் காப்பாற்றினார். மீட்புப் பணியின்போது கூர்மையான கட்டை ஒன்று சதாசிவனின் வலது கண்ணில் குத்தி, ரத்தம் வழிந்தோடிய நிலையில், செங்கானுர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலப்புழா அரசு மருத்துவமனையில் சதாவிசனை பரிசோதித்த மருத்துவர்கள், கண் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதால், முறையான சிகிச்சை எடுக்கவில்லை என்றால் இடது கண்ணும் பாதிக்கப்படும் என எச்சரித்தனர்.

ஆனால், தேநீர் வியாபாரம் செய்து வந்த சதாசிவனால், மேற்கொண்டு சிகிச்சை எடுக்க முடியாத நிலையில், அவரது இரு கண்களின் பார்வையும் முற்றிலும் பறிபோயுள்ளது. சதாசிவன் கண் பார்வை இழந்திருப்பதால் அவரது குடும்பம் செய்வதறியாது தவித்து வருகிறது. இதனால், உதவி கேட்டு சதாசிவன் சார்பாக கேரள அரசுக்‍கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00