பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

Sep 12 2018 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், அண்மைக் காலமாக, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00