கர்நாடகாவில் ஜோதிடம் சொல்லி பார்வையாளர்களை அசத்தும் கழுதை : ஏராளமானோர் குவிந்தனர்
Aug 14 2018 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் கழுதை ஒன்று, தன் காது மூலம் ஜோதிடம் சொல்லி பார்வையாளர்களை கலகலப்பூட்டி வருகிறது.
கர்நாடக மாநிலம் கலாபுராகி நகரில் கலீல் அகமது கான் என்பவர், பயிற்சியளிக்கப்பட்ட கழுதையைக் கொண்டு ஜோதிடம் கூறி வருகிறார். 20 ரூபாய் டிக்கெட் வாங்கி ஜோதிடம் சொல்லும் பகுதிக்கு சென்றால், வட்டவடிவ தடுப்புக்குள் கழுதை சுற்றிச்சுற்றி வருகிறது. தடுப்புக்கு பின்னே பார்வையாளர்கள் நிற்கிறார்கள். அப்போது, பார்வையாளர்களில் யார் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞராக ஆவார் என கேள்வி கேட்கிறார் அதன் பயிற்சியாளர். உடனடியாக, குறிப்பிட்ட ஒருவரை நெருங்கி நிற்கும் கழுதை, காதை திருப்பி சுட்டிக்காட்டுகிறது.
பன்னாலால் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கழுதை கூறும் ஜோதிடத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும், எஜமானரின் சொல்லுக்கு அந்த கழுதை கட்டுப்படும் விதத்தை ரசிக்க அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. இதனிடையே, கழுதை துன்புறுத்தப்படுவதாக விலங்கியல் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.