உத்தரகண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து : 14 பேர் பலி - 18 பேர் படுகாயம்

Jul 19 2018 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 14 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் அரசுப் போக்‍குவரத்து பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்‍ கொண்டு ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சூரியதார் என்ற இடத்தில் விபத்துக்‍குள்ளானது. 250 மீட்டர் உயரத்திலிருந்து பேருந்து உருண்டு கீழே விழுந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த 18 பேர் உடனடியாக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்‍கக்‍கூடும் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்‍கு தலா 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்‍கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நீதி விசாரணைக்‍கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00