விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியீடு : ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Jul 19 2018 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தி, பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அவற்றை மக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து, புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தது. மேலும், 200, 50 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியானது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி விரைவில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இதற்கான மாதிரியை இன்று வெளியிட்டுள்ளது. ரூபாய் நோட்டின் ஒருபுறம், பாரம்பரியம் மிக்க குஜராத் மாநிலத்தின் பதான் நகரில் உள்ள மகாராணியின் படிக்கிணறு அச்சிடப்பட்டு உள்ளது. இந்த கிணறு யுனெஸ்கோ பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.