செயற்கைக்கோள் தயாரிக்கும் பணிகளைத் தனியாருக்கு வழங்கிய இஸ்ரோ : 3 ஆண்டுகளில் 27 செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்படும்
Jul 19 2018 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முதல்முறையாக, 27 செயற்கைக் கோள்களை தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இதுவரை தானே செயற்கைக்கோள்களை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வந்தது. இந்நிலையில், முதன்முறையாகச் செயற்கைக் கோள்கள் தயாரிக்கும் பணிகளை ஆல்ஃபா டிசைன், டாட்டா ஆகிய 2 தனியார் நிறுவனங்களுக்கும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் பொதுத்துறை நிறுவனத்துக்கும் வழங்கியுள்ளது.
இந்த 3 நிறுவனங்களும் 3 ஆண்டுகளில் மொத்தம் 27 செயற்கைக் கோள்களைத் தயாரிக்க உள்ளன. இஸ்ரோவின் மேற்பார்வையிலும், வழிகாட்டுதலுடனும் இந்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.