உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை அதிகரிக்‍க முடிவு - நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

Jul 18 2018 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை அதிகரிக்‍க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதற்கான மசோதாவை நிறைவேற்றவும் திட்டமிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பற்றாக்‍குறை காரணமாக ஏராளமான வழக்‍குகள் தீர்க்‍கப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனைக்‍ கருத்தில் கொண்டு நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும்படி நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த மத்திய அரசும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 67-ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு சட்டத்தில் வழிவகை செய்யும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக்‍ கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00