வரும் 20-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : இந்தியா முழுவதும் உள்ள 93 லட்சம் லாரிகள் பங்கேற்கும்
Jul 17 2018 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, திட்டமிட்டபடி 20ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு, சுங்க சாவடி கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், நாள்பட்ட சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் அகில இந்திய தலைவர் திரு. பல்மல்கிட்சிங், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்க மாநிலச் செயலாளர் சண்மூகப்பா, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் குமாரசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். திட்டமிட்டபடி, வரும் 20ம் தேதி முதல் இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இந்தியா முழுவதும் உள்ள 93 லட்சம் லாரிகள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.