நீட் தேர்வில் வினாத்தாள் குளறுபடிக்‍கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் - தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Jul 16 2018 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வில் வினாத்தாள் குளறுபடிக்‍கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின்போது, தமிழில் அமைந்த வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக இருந்ததால், அவற்றுக்‍கு கருணை மதிப்பெண் கோரி மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.கே. ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் வழக்‍கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஒரு கேள்விக்‍கு 4 மதிப்பெண் வீதம் 49 கேள்விகளுக்‍கும் மொத்தம் 196 கருணை மதிப்பெண் வழங்க சி.​பி.எஸ்.இ.க்‍கு உத்தரவிட்டது. இந்நிலையில், நீட் தேர்வில் வினாத்தாள் குளறுபடிக்‍கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்‍கு தொடர்பாக திரு. டி.கே. ரங்கராஜன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்‍கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00