நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் - அவையை சுமூகமாக நடத்த மக்களவை சபாநாயகர் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
Jul 16 2018 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளதையொட்டி, நாளை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் ஆலோசனை நடத்துகிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, வழக்கம்போல் நாளை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்துக்கு முன்பாக, பல்வேறு கட்சி தலைவர்களை சபாநாயகர் தனித்தனியாக அழைத்து பேசுகிறார்.
அப்போது, எம்.பி.க்கள் அவரவர் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மக்களவை காங்கிரஸ் தலைவராக திரு.மல்லிகார்ஜுன கார்கே இருந்தபோதிலும், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுல் காந்தியை சபாநாயகர் அழைத்து பேசுவார் என்று கூறப்படுகிறது.