ஆபத்தான முறையில் பாலத்தை கடக்கும் பள்ளிச் சிறுவர்கள் : குஜராத் அரசு இதனை கவனிக்குமா?
Jul 11 2018 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் கேதார் மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்தபோதிலும் மாற்றுப் பாதை இல்லாததால், ஆபத்தான முறையில் பள்ளிச் சிறுவர்கள் அதனை கடந்து செல்கின்றனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கேதார் மாவட்டத்தில் அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்பட்டு வந்த பாலம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனை சீரமைத்துத் தரவேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிய போதிலும், அம்மாநில பா.ஜ.க. அரசு அதனை சற்றும் கண்டுகொள்ளவில்லை. மாற்றுப் பாதை இல்லாததால், அங்குள்ள மக்கள் இந்தப் பாலத்தின் வழியே ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். குறிப்பாக பள்ளிச் சிறுவர்கள் நாள்தோறும் இந்தப் பாலத்தை கடந்து செல்லவேண்டிய அவலநிலை இருந்து வருகிறது. எனினும், குஜராத் அரசு இதனை கண்டுகொள்ளாமலேயே உள்ளது.