பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி ஜூலை 20 முதல் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் ஓடாது - அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Jul 10 2018 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் ஜூலை 20 முதல் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் ஓடாது என அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறித்துள்ளன.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் திரு. சண்முகப்பா, சுங்கவரியை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்த லாரி உரிமையாளர்கள் தயாராக இருப்பதாகவும், சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுத்தினார்.