காந்தி ஜெயந்தியன்று ரயில்களில் சைவ தின அனுசரிப்பு பரிந்துரை நிறுத்திவைப்பு : ரயில்வே நிர்வாகம் உத்தரவு
May 23 2018 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காந்தி ஜெயந்தி அன்று ரயில்களில் சைவ தின அனுசரிப்பு தொடர்பான பரிந்துரையை நிறுத்தி வைக்கும்படி ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி 2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளிலும் அக்டோபர் 2-ந்தேதியை சைவ தினமாக அனுசரிக்க பரிந்துரை செய்து அண்மையில் ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு கடிதம் எழுதியது. அதில், சைவ தின அனுசரிப்பையொட்டி அன்றைய தினம் ரெயில்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வேயின் இதர கட்டிடங்கள் எதிலும் அசைவ உணவு வினியோகிக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து ரயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி அனைத்து மண்டலங்களின் ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர்களுக்கும் ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.