கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை : 12 பேரை நோய் தாக்கியிருப்பது உறுதி
May 22 2018 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தொடர்பான பரிசோதனையில் 12 பேரை நோய் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஸ்வைன் ஃபுளூ, பறவைக் காய்ச்சல் போன்ற நோய்களைத் தொடர்ந்து தற்போது நிபா என்ற வைரஸ் மூலம் கேரளாவில் ஒருவகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்கியதில் 10 பேர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் உயிரிழந்த 10 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். மேலும் இருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் அவர் கூறினார். புதிதாக வேறு எந்த நோயாளிகளும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.