2017-2018-ம் நிதி ஆண்டுக்கான, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி 8 புள்ளி ஐந்து ஐந்து சதவீதமாக குறைப்பு - ஒரு நிறுவனத்தில் 10 தொழிலாளர்கள் இருந்தாலே பி.எப். பிடிக்க நடவடிக்கை
Feb 22 2018 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2017-2018-ம் நிதி ஆண்டுக்கான, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டி 8.55 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த ஆண்டில், 8.65 சதவீதமாக இருந்த வட்டி, தற்போது 0.10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், எதிர்காலத்தை கணிக்க முடியாது என்பதால், இந்த வட்டி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்கள் இருந்தால், பி.எப். பிடிக்க வேண்டும் என்ற விதிமுறையை 10 தொழிலாளர்கள் இருந்தாலே போதும் என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி திரு. சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.