ஜம்மு காஷ்மீர் மாநிலம், மலங்புரா பகுதியில் இந்திய விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் : பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதலால் தீவிரவாதிகள் தப்பியோட்டம்
Feb 21 2018 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலம், மலங்புரா பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் எதிர்தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் தப்பியோடினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மலங்புரா பகுதியில் இந்திய விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த விமானப்படைதளத்தில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி, 3 பயங்கரவாதிகள் திடீரென புகுந்து, கையெறி குண்டுகளை வீசியும், துப்பாகியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் உடனடியாக எதிர்தாக்குதல் நடத்தினர். இதனைதொடர்ந்து தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அந்த பகுதி முழுவதையும் சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பயங்கரவாதிகள் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.