அணு ஆயுத வல்லமையுடன் எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-2 ஏவுகணை - வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது
Feb 20 2018 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அணு ஆயுதங்களை சுமந்து சென்று 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை இன்று காலை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் அதிநவீன ஏவு கணைகளை உருவாக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவிடம் பிருத்வி, தனுஷ், அக்னி ஆகிய ஏவுகணைகள் உள்ளன. அக்னி வகை ஏவுகணைகளில் அக்னி 5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்ததாகும்.
இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு, இரண்டாயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஒடிஷாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து இன்று காலை 8.38 மணிக்கு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 20 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் விட்டமும், 18 டன் எடையும் கொண்ட அக்னி-2 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட எரிபொருள் கொண்டு இயங்கும் திறன் படைத்தவை.